ஈரோடு மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மனைவி வேங்கடத்தம்மாள். 73 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வயதான காலத்தில் யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என அவ்வப்போது உறவினர்களிடம் புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் சோர்வாக அமர்ந்திருந்த வேங்கடத்தம்மாளிடம் அவரது மகன் தட்சிணாமூர்த்தி என்னவென்று கேட்க, தான் தற்கொலை செய்ய முடிவு எடுத்து கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தட்சிணாமூர்த்தி தனது தாயை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேங்கடத்தம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.