பிரதமர் மோடியின் ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி வந்து வாகனப் பேரணி நடத்தினால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், டெல்லியில் இருந்து அடிக்கடி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்றார். மேலும், யார் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.