சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தேமுதிக மனு அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த விஜயகாந்தின் உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நாள்தோறும் மக்கள் அங்கு சென்று வரும் நிலையில், காவலர்கள் பற்றாக்குறை எனக் கூறி போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேமுதிக மனு அளித்துள்ளது.