மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி,வயது மூப்பு காரணமாக காலமானார். ‘நாடு விட்டு நாடு’ ‘நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் முத்தம்மாள். குறிப்பாக ‘நாடு விட்டு நாடு’ நூலில், கோவையில் இருந்து மலேசியாவுக்கு கூலித் தொழிலாளியாக இடம்பெயர்ந்து முன்னேறியக் குடும்பத்தின் கதையை பதிவு செய்திருந்தார். இவரது மறைவுக்கு இலக்கியவாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.