சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புயல் நிவாரண தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததில் இருந்து அந்த பணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற கேள்வி இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.