மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

நிவாரண நிதி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறிய அமைச்சர், இயற்கை பேரிடரை சரியாக கையாள்வதில் திமுக அரசு முன்னோடி என்றார். மேலும், கூடுதல் நிவாரணம் கேட்கும் அண்ணாமலை, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கான நிலுவை தொகையை பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.