தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் டிசம்பர் 14ஆம் தேதி காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரேமலதா உரையாற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் தேடி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.