மாதுளம் பழம் சாப்பிட்டா ஒன்றரை வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாலிக் நகர் பகுதியில் சேர்ந்த ராஜா அனீஸ் மற்றும் பாத்திமா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் முகமது ஹர்ஷத் என்ற மகன் உள்ளார்.

நேற்று அந்த குழந்தை மாதுளம் பழம் சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் மயங்கிய குழந்தையை தூக்கிக் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்ப பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.