புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகள் உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகிற 20-ஆம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு ஆடுகளம் தகவல் தொடர்பு மையம் 9514000777, 7825883865 என்ற எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என கூறியுள்ளார்.