கன்னியாகுமாரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவம் படித்து வந்த மாணவி சுகிர்த்தா விஷ ஊசி செலுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி நேற்று வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் இவர் தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் தனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உட்பட மூன்று பேராசிரியர்கள் காரணம் என மருத்துவ மாணவி கடிதத்தில் கூறியிருந்தது. அதில் ஒரு ஆண் பேராசிரியர் உடல் அளவிலும் மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.