கோவை தொண்டாமுத்தூர் அருகே ஆறு வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அருகே நாகராஜபுரம் நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.

தண்ணீர் தொட்டியில் கிடந்த சிறுவன் குகன்ராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.