குமரி மாவட்டத்தில் மிகப் பிரபலமான மருத்துவ கல்லூரி ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி. இங்கு பயின்ற மருத்துவ மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார். அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக குலசேகரம் போலீசார் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.  கல்லூரியில் பயின்று வரும் சுகிர்தா நேற்று கல்லூரிக்கு திரும்பாததை அடுத்து அவர் அறையில் சென்று பார்க்கும் போது அவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வு  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக குலசேகரம் போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வந்தனர் . இந்த நிலையில் அந்த மாணவி தங்கி இருந்த அறையை போலீசார் சோதனை மேற்கொண்டபோது,  ஒரு அதிர்ச்சிகரமான கடிதம் ஒன்று சிக்கி இருக்கிறது. அவர் தற்கொலைக்கு காரணம் குறித்த கடிதத்தை மாணவி சுகிர்தா எழுதி இருக்கிறார்.

அதில் மூன்று பேராசிரியர்களை அவர் இறப்புக்கு காரணம் காட்டியிருக்கிறார்.பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக அந்த கடிதத்தில் மாணவி எழுதி வைத்திருக்கிறார். அதே போல  ஹரிஷ் மற்றும் பிரீத்தி ஆகியோரையும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.