ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் நல சங்க தலைவர் தொடர்ந்த வழக்கில், ஊராட்சித் தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப் போன்ற நிலைக்கு தள்ள முடியாது. ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தான் மத்திய அரசு நிதி வழங்குகிறது.

ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது. கூட்டாட்சி முறை, அதிகார பகிர்வை கோரும் மாநில கட்சிகள், மாநில தலைநகரங்களில் அதிகாரங்கள் குவிந்திருக்க வேண்டும் என்று விரும்புவது ஏன்? என்றும் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.