தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதில் ஒரு சிலருக்கு ஆயிரம் ரூபாய் பெற தகுதி பெற்றதாக எஸ்எம்எஸ் வந்துள்ள நிலையிலும் வங்கி கணக்கில் பணம் வரவில்லை.

அப்படி பணம் வராதவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆதார் இணைக்காத மகளிருக்கு மணியார்டர் மூலம் ஆயிரம் ரூபாய் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.