தமிழ்நாடு அரசின் நிதித்துறை முதன்மை செயலர் உதயசந்திரனின் தாயார் லீலாவதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். நாமக்கல்லை சேர்ந்த அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார். தாயார் லீலாவதியின் மறைவால் வாடும் உதயசந்திரன் மற்றும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் அறிக்கையின் மூலம் குறிப்பிட்டிருக்கிறார்