தமிழகத்தில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படும் நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்திக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. இந்த நிலையில் இந்த இரண்டு நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபான விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.