தமிழகத்தில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலையை 5 மணி வரை 6 மாதத்திற்கு வகுப்புகள் நடைபெறும் எனவும் இதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.cecc.in/ என்ற இணையதளம் மூலமாக வருகின்ற ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 – 25954905 மற்றும் 044 – 28510537  ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.