தென்காசியில் அண்ணாமலை தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஏமாற்றி ஆட்களை அழைத்து வந்ததாக அந்த கட்சியின் முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக காயத்ரி ரகுராம் கூறியதாவது, கூட்டத்தை இழுக்க ரஜினிகாந்த் திரைப்படம் “அண்ணாமலை” ஷோ போடுகிறார்கள் என்று மக்களிடம் சொல்கிறார்கள். நேரில் வந்து பார்த்தபோது போலிமலை ஷோ என தெரியவந்தது. ஆகவே மக்கள் ஏமார்ந்து திரும்பி சென்றதாக காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்