மிக்ஜாம் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் சென்னையை கடக்கும்போது மக்கள் வெளியே வர வேண்டாம். அரசு சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ள நிலையில் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் 162 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.