மிக்ஜோம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 50-70 கி.மீ வரை காற்று வீசும் என்பதால், பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதால், பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம்.