நாளை மறுநாள் ‘மிக்ஜாம்’ புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.மிக்ஜோம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது .

இந்நிலையில், “கனமழையுடன் 60-70 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்” என்ற எச்சரிக்கை செய்தியை பேரிடர் மேலாண்மை வாரியம் பலருக்கும் அனுப்பியுள்ளது. மேலும், தமிழக அரசும் மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.