வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருக்கக்கூடிய நிலையில்,  தமிழகத்தின் வடகடலோர மாவட்டமான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களுக்கு இன்று அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதீத கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில் தற்போது இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.