ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் கடற்படை தினத்தை முன்னிட்டு டிசம்பர் 4 அன்று சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மிச்சங் புயல் காரணமாக சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சாகச நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் பங்கேற்றார். விமானப்படையை சேர்ந்த வீரர்கள் விண்ணில் விமானத்தில் பறந்தவாறு தீ பிழம்பை கக்கியபடியும் வண்ணப் பொடிகள் தூவியப்படியும் சாகசங்களில் ஈடுபட்டனர். அதேபோன்று கடற்படையினர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலமாக பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் சாகசங்களை செய்து காண்பித்தனர்.