பெங்களூரின் கிழக்கே அமைந்துள்ள கண்ணமங்களா பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ்குமார் – குஷ்பு ஆசிஷ்திரிவேதி தம்பதி. ஹரிஷ்குமார் சாப்ட்வேர் இன்ஜினியராக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இத்தம்பதி 18 மாடிகள் கொண்ட குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் வசித்து வரும் நிலையில் சம்பவத்தன்று குஷ்பு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஜன்னலை திறந்து வைத்து விட்டு மர ராக் மீது ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்த அவர் திடீரென வலுக்கி ஜன்னல் வழியாக கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் குடும்பத்தினர் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குஷ்புவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குஷ்பு இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.