தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் டாட்டா நகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ரசாயனக் கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பல நாசம் ஆகியுள்ளன. பற்றி எரிந்தது பிளாஸ்டிக் என்பதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து அங்குள்ள மக்கள் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அனுமதி இன்றி தொழிற்சாலை நடத்தியது தெரியவந்துள்ளது.