வங்கதேசத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறையில் இருந்த 9 ஆடுகள் சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டன. பரிசல் நகரில் உள்ள ஒரு கல்லறையில் அத்துமீறி நுழைந்து மேய்ச்சலில் ஈடுபட்டதற்காக ஆடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன.

இச்சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடந்தது. அவற்றின் உரிமையாளர் ஷாசிப் ராஜீப், ஒரு வருடத்திற்குள் விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தை அனுகினார். ஆனால் தண்டனை காலம் முடிந்து இம்மாதம் 8ஆம் தேதி ஆடுகள் விடுதலை  செய்யப்பட்டன.