மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சராக தேர்வாகியுள்ளார் மோகன் யாதவ். போபாலில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக தேர்வானார் மோகன் யாதவ். தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்எல்ஏவான மோகன் யாதவ் மத்திய பிரதேச முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச உயர்கல்வித்துறை அமைச்சராக இவர் இருந்துள்ளார். மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள மோகன் யாதவுக்கு சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.