சீனாவில் 20 விஞ்ஞானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மேலும் சீனாவில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த மாதம் நீக்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்குள் சீன இன்ஜினியரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய இன்ஜினியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக டிசம்பர் 15-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம் தேதிக்குள் இந்த மரணங்கள் நடைபெற்றுள்ளது. மிகவும் புகழ்பெற்ற இன்ஜினியரிங் அகாடமியான இதில் 900-கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ஆனால் விஞ்ஞானியின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.