இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூரில் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு மாணவியை, அதேப்பள்ளியில் 9,10ம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து மாணவி மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.