சென்னை அடுத்த மதுரவாயிலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் தொட்டிகள், பேரல்கள், கால்வாய்கள்  முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.

மேலும் சிறுவனின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆணையர் ராதாகிருஷ்ணன்,  அந்த பகுதியில் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாகவு புகார் எழுத நிலையில் ஆணையர் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளார்.