ஹரியானா மாநிலத்தில் இறந்து விட்டதாக கூறிய நபர் திடீரென்று உயிர்பிழைத்த அதிசயம் நடந்துள்ளது. மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிய நிலையில் 80 வயதான அந்த நபரின் உடலை வீட்டுக்கு செல்லும் வழியில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் இறங்கிய போது அவருக்கு மீண்டும் உயிர் திரும்பியதால் உறவினர்கள் என்று அதிர்ச்சி அடைந்தனர். இது மருத்துவமனை நிர்வாகத்தின் தவறாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.