பெங்களூரை சேர்ந்த 39 வயது பெண் தொழிலதிபர் சுசானா சேத் கோவாவில் தன்னுடைய நான்கு வயது மகனை கொலை செய்து சூட்கேசில் வைத்து பெங்களூருக்கு எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொலையை எப்படி செய்தார் என்பதை நடித்துக் காட்டிய சுஹானா, குழந்தையை படுக்க வைத்து தாலாட்டு பாடிக்கொண்டே குழந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். விவாகரத்திற்கு பின்னர் மன உளைச்சலுக்கு அவர் ஆளாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.