நாகை தேவூர் பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி சுதா. இருவரும் சித்த மருத்துவராக உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழும் இவர்கள் முறையாக விவாகரத்தும் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தனது மகனை பார்ப்பதற்காக வீட்டுக்கு வருவதும் சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு அடிக்கடி செந்தமிழ் செல்வன் செல்வது சுதாவிற்கு பிடிக்கவில்லை.

மேலும் அங்கு செல்லும் அவர் பறக்கும் முத்தம் கொடுப்பது போல் செய்வதால் தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ்செல்வனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ்ச்செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.