நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி காயம், மரணம் ஏற்படுத்தியதாக குன்னூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சாலையில் 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.