நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்றும் நாளையும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. நாட்டின் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அதை திறப்பட எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன்படி படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் மற்றும் மருந்துகளின் கையிருப்புகளை உறுதி செய்யும் விதமாக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.