தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மழை வெள்ள பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் சமீபத்தில் தமிழக அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மக்களுக்கு நிவாரணம் பெற டோக்கன் விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ரேஷன் கடை ஊழியர்களும் அதிகாரிகளும் வீடு வீடாக வந்து டோக்கன்களை வழங்க உள்ளனர். எனவே நீங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் வீட்டிலேயே இருங்கள். இரண்டொரு நாட்களில் உங்கள் வீடு தேடி டோக்கன் வந்து சேரும் என அரசு தெரிவித்துள்ளது.