தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். வங்கி மற்றும் காப்பீடு நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பரசன், வெளி மாவட்ட மதிப்பீடாளர்கள் மூலம் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட அவற்றின் பாதிப்பு விவரத்தை மதிப்பீடு செய்து இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.