தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அக்டோபர் 7 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து வாலாஜாபாத் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். முகாமில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எழுத்து தேர்வுகள் எதுவும் இல்லாமல் பணியாளர்கள் அனைவரும் நேர்முக தேர்வின் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேலை இல்லாத இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.