நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குல வணிகர் புறம் ரயில்வே கேட்டில் இரு சக்கர வாகனம் மோதியதில் சுகாதாரத்துறை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் ஜெயப்பிரகாஷ் அவரது உடலை மீட்க சென்றபோது அவர் மீது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனம் மோதி ஓட்டுனரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.