சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அய்யா பிள்ளை தெருவில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அவர்களது குழந்தையை அரவிந்தின் பெற்றோர் பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் ராஜேஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அரவிந்தின் பெற்றோர் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டனர். இதன…