சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணியில் பிலிப்ஸ் ஜி.பி.எஸ்.எல்.எல்.பி என்ற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் நிறுவனத்தில் அகஸ்டின் சிரில் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் நிறுவனத்தின் பணம் 5 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார். இதற்கு அவரது நண்பர் ராபின் கிறிஸ்டோபர் உடந்தையாக இருந்துள்ளார்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அகஸ்டின், கிறிஸ்டோபர் ஆகியோரின் சொந்த ஊரான பரமக்குடியில் இருக்கும் வீடுகளில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 6 லட்சம் ரூபாய் பணம், ஒரு கார், 215 பவுன் தங்க நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைக்காக இருந்த அகஸ்டின், கிறிஸ்டோபர் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.