தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாதம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வளாக த்தில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம்.

இதில் கலந்து கொள்ள தனியார் துறை நிறுவனங்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விவரங்களை ஜூலை 14ஆம் தேதி அதாவது இன்று போல் அனுப்ப வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ள ஜூலை 19ஆம் தேதிக்கு முன்னதாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9080022088, 9025630931  என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.