கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் இலங்கை அகதிகள் முகாமில் யசோதரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு யசோதரன் தனது சகோதரர்களான ஜெயகாந்தன், ஜெகதீஷ், உறவினர் விஜயேந்திரன் ஆகியோருடன் பொள்ளாச்சியில் இருக்கும் தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த புலி திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு படம் திரையிட தாமதமானதாக தெரிகிறது.

இதுகுறித்து தியேட்டர் ஊழியர்களிடம் கேட்டபோது சிலர் தகராறு செய்து சோடா பாட்டிலால் ஜெயகாந்தன், விஜயேந்திரன் ஆகியோரை தாக்கினர். இது குறித்து கொலை முயற்சி வழக்குபதிவு செய்த போலீசார் இப்ராஹிம், அப்துல் பாசித், பாலு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த பொள்ளாச்சி சப்- கோர்ட் நீதிபதி மூன்று பேருக்கும் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.