கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் செல்லம்மாளின் நிலத்திலிருந்த வேப்பமரம் முறிந்து உயர் அழுத்த மின் கம்பியின் மீது விழுந்து மின் கம்பிகள் அறுந்து கிடந்தது.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் விஜயா, பிரவீன் ராஜ், தங்கராசு, பெரியம்மாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றது. அந்த மாடுகள் எதிர்பாராதவிதமாக செல்லம்மாளின் நிலத்தில் அறுந்து கிடந்த  மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.