மேற்கு வங்க அரசியலில் திங்கட்கிழமை பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இல்லத்திற்கு வெளியே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான குணால் கோஷ் மீது மர்ம நபர் ஒருவர் முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.

மம்தா பானர்ஜியின் இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது, அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென குணால் கோஷை நோக்கி முட்டைகளை வீசினார், அவை நேரடியாக அவரது தலைமீது பட்டதை வீடியோவில் காண முடிகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு மற்றும் குழப்பம் நிலவியது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக அந்த இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என்றாலும், மேற்கு வங்க அரசியலில் நிலவும் உள்நாட்டு மோதல்களும் அரசியல் பதற்றங்களும் இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

“>

 

இந்தச் சம்பவம் தற்போது மாநிலத்தின் அரசியல் சூழலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.