சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் புத்தகரம் இந்திரா நகர் முதல் தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சம்பாக்கம் பகுதியில் டேங்கர் லாரிகளுக்கு வெல்டிங் செய்யும் பட்டறை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை டேங்கரில் ஓட்டை இருந்ததை சரி செய்வதற்காக ஒரு லாரி பட்டறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி காலியாக இருந்த டேங்கர் மேல் ஏறி வெல்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது நெருப்பு பொறி டேங்க் விழுந்து மிச்சம் மீதி இருந்த டீசலில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதனால் சுமார் 20 அடி தூரத்திற்கு கிருஷ்ணமூர்த்தி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.