இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் FASTag பதிலாக ஜிபிஎஸ் கட்டண வசூல் முறை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜிபிஎஸ் கட்டண வசூல் முறை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட FASTag ஏப்ரல் மாதத்திற்கு பிறகு படிப்படியாக நீக்கப்படும் எனவும் தெரிகிறது.