உடல் ஊனமுற்றவர் போல நடித்து பொதுமக்களிடம் ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்த நபர் ஒருவர்,  மக்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன், பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தக் காட்சிகளில், உடல் நலம் குன்றியவர் அல்லது மாற்றுத்திறனாளி போன்று நடித்துப் பொதுமக்களிடம் உதவி கேட்டுப் பிச்சை எடுத்து வந்த அந்த நபரின் ஏமாற்று வேலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திடீரென அப்பகுதி மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு நடத்திய விசாரணையில், அவர் நலம் குன்றியவர் போலத் திட்டமிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது.

எனினும், இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ இன்னும் முழுமையாகச் சரிபார்க்கப்படவில்லை என்றாலும், இதுபோன்ற செயல்கள் உண்மையில் தேவையில் இருப்பவர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“>

 

பொதுமக்களின் பரிதாபத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தொடர்ந்து ஏமாற்று வேலைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன.