சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு ஜூன் 28ஆம் தேதி ஆன இன்று பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11.15 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கு, தாம்பரத்திற்கு நள்ளிரவு 12.43 மணிக்கு, திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 11.45 மணிக்கு சென்றடையும்.

அதனைப் போலவே மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜூன் 29ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இது ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.