சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். அதனைப் போலவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் இரண்டும் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் பெறுபவரின் ஓய்வு பெற்ற மாதக்கணக்கில் கொண்டு வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும். வாழ்நாள் சான்று அளிக்கப்பட வேண்டிய மாதத்தில் அளிக்க தவறினால் ஒரு மாதம் சலுகை வழங்கப்படும். அதற்குள் வாழ்நாள் சான்றிதழ் வழங்காதவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வாழ்நாள் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் வாழ்நாள் சான்றுகளை அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.